சென்னை, ஏப். 27- சென்னை கோயம்பேடு சந்தையை மூன்றாக பிரித்து புறநகரில் அமைப்பது குறித்து வியாபாரிகள் சங்கத்தினருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. சென்னை, கோவை உள்ளிட்ட 5 மாநகராட்சியில் ஏப்ரல் 29ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு அமல்ப டுத்தப்பட்டுள்ளது. இதற்காக கோயம்பேடு சந்தையில் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் காய்கறிகள் வாங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதேபோல தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்து வரும் மத்திய குழுவினர் ஞாயிற்றுக் கிழமை கோயம்பேடு சந்தையில் ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில், கோயம்பேடு சந்தையை மாதவரம், கேளம் பாக்கம் போன்ற பகுதிகளில் பிரித்து அமைப்பது குறித்து கோயம்பேடு மொத்த வியா பாரிகள் சங்க பிரநிதிகளுடன் சிஎம்டிஏ செயலாளர் கார்த்தி கேயன், வேளாண் துறை செய லாளர் ககன்தீப்சிங் பேடி, சென்னை மாநகராட்சி ஆணை யர் பிரகாஷ், மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கோயம்பேடு சந்தை யில் மக்கள் சமூக இடை வெளியை பின்பற்றாததால் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது என்றும், சந்தையை புறநகரில் அமைப்ப தற்கான அனைத்து செலவு களையும் அரசே ஏற்கும் என்றும் கார்த்திகேயன் தெரிவித்தார். அதேபோல, கோயம்பேடு சந்தையில் ஏற்கனவே 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி யாகிருப்பதாகவும், மேலும் 4 பேருக்கு உறுதியானால் சந்தையை மூடுவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்தார்.
இதற்கு ஆட்சேபனை தெரி வித்த வியாபாரிகள் சங்கத்தினர், அரசு அறிவித்த முழு ஊரடங்கு உத்தரவினால்தான் கோயம் பேடு சந்தையில் மக்கள் கூட்டம் அதிகரித்ததாகவும், சந்தையை புறநகரில் அமைப்பதால் தங்க ளின் வியாபாரம் பாதிக்கப்படும் எனவும் தெரிவித்தனர். இன்றைய கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து வியாபாரிகளுடன் கலந்து ஆலோசித்து தெரிவிக்க அறிவுறுத்திய அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (ஏப். 18) மீண்டும் ஆலோசனை நடை பெறும் என்று தெரிவித்தனர்.